வல்லூர் அனல்மின் நிலையத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

வல்லூ அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
வல்லூர் அனல்மின் நிலையத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
Published on

மீஞ்சூர் அடுத்த வல்லூர் கிராமத்தில் தேசிய எரிசக்தி துறையும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து வல்லூர் அனல் மின் நிலையம் அமைத்தனர். இதில் மூன்று யூனிட்டில் தலா 500 வீதம் 1,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் 3-வது யூனிட்டில் உள்ள கொதிகலன் குழாயில் பாதிப்பு ஏற்பட்டதால் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை சீர் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com