குடும்ப தகராறில் கட்டிட தொழிலாளியின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

மாதவரத்தில் குடும்ப தகராறில் கட்டிட தொழிலாளியின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குடும்ப தகராறில் கட்டிட தொழிலாளியின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

செங்குன்றம்,

சென்னை அடுத்த மாதவரம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் மோகன். இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஈஸ்வரி (வயது 25). இவர்களுக்கு 5 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

மோகனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் மனமுடைந்த ஈஸ்வரி வீட்டில் மின்விசிறியில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த மாதவரம் இன்ஸ்பெக்டர் கோபிநாத் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை தியாகராயநகரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் ஷகீன் (வயது 26). இவர் துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் போயஸ்கார்டன் பகுதியை சேர்ந்த சண்முகம் (40) மற்றும் ஷகீன் ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்ளாமல் கடந்த 4 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் ஷகீன் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சண்முகத்திடம் அவ்வபோது கூறி வந்துள்ளார். ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த ஷகீன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த தேனாம்பேட்டை போலீசார் அவரது உடலை, மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com