அமைந்தகரையில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை

அமைந்தகரையில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். காதலருடன் பூங்காவில் நின்று பேசுவதை பார்த்துவிட்ட தங்கை, அதை தந்தையிடம் சொல்வதாக கூறியதால் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
அமைந்தகரையில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை
Published on

பூந்தமல்லி,

சென்னை அமைந்தகரை, சதாசிவம் மேத்தா தெருவைச் சேர்ந்தவர் குமார். இவருடைய மகள் சவுமியா(வயது 19). இவர், சென்னையில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சவுமியா, வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளித்தார். உடல் முழுவதும் தீ பரவியதால் வலியால் அலறி துடித்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் சவுமியா உடலில் எரிந்த தீயை அணைத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com