ஆத்தூரில் தீக்குளித்த பெண் சாவு

ஆத்தூரில் தீக்குளித்த பெண் பரிதாபமாக இறந்தார் .
ஆத்தூரில் தீக்குளித்த பெண் சாவு
Published on

ஆத்தூர்,

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ஆத்தூர் நகராட்சி 30-வது வார்டு மந்தைவெளி பெரியார் தெருவை சேர்ந்தவர் செல்வம். மூட்டை தூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி கீர்த்தி (வயது 23).

இவர்களுக்கு திருமணம் ஆகி ஒன்றரை ஆண்டு ஆகிறது. ஏழு மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கடந்த 29-ந்தேதி இரவு கீர்த்தி தனது வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கீர்த்தி நேற்று இறந்தார். உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். திருமணம் ஆகி ஒன்றரை ஆண்டில் கீர்த்தி இறந்ததால் ஆத்தூர் உதவி கலெக்டர் அபுல் காசிம் இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com