

பெங்களூரு,
பெங்களூருவில் போக்கு வரத்து நெரிசலை குறைக்கும் வகையில் உயர்த்தப்பட்ட சாலை அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் குமாரசாமி அறிவித்தார். அந்த திட்டம் குறித்து உயர் அதிகாரி களுடன் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் பொதுப் பணித்துறை மந்திரி எச்.டி. ரேவண்ணா உள்பட அதி காரிகள் பலர் கலந்து கொண்டனர். ஆலோசனைக்கு பிறகு குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:-
ரூ.7,224 கோடியில் ஹெப்பால்-சில்க்போர்டு இடையே 26.89 கிலோ மீட்டர் நீளத்திற்கும், கே.ஆர்.புரம்-கொரகுன்டேபாளையா இடையே ரூ.6,245 கோடியில் 20.95 கிலோ மீட்டர் நீளத்திற்கும், வர்த்தூர் கோடி-மைசூரு ரோடு இடையே ரூ.7,083 கோடியில் 29.48 கிலோ மீட்டர் நீளத்திற்கும், செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனை-அகரா இடையே ரூ.826 கோடியில் 4.48 கிலோ மீட்டர் நீளத்திற்கும், அல்சூர்-டிசோசா சர்க்கிள் இடையே ரூ.733 கோடியில் 2.80 கிலோ மீட்டர் நீளத்திற்கும், வீலர்ஸ்ரோடு சந்திப்பு-கல்யாண்நகர் இடையே ரூ.1,653 கோடியில் 6.46 கிலோ மீட்டர் நீளத்திற்கும், ராமமூர்த்திநகர்-ஐ.டி.பி.எல். இடையே ரூ.1,731 கோடியில் 10.99 கிலா மீட்டர் நீளத்திற்கும் உயர்த்தப்பட்ட 4 வழிச்சாலை அமைக்கப்படும்.