பிவண்டியில் அழகுநிலைய பெண் படுகொலை

பிவண்டியில் அழகு நிலைய பெண் படுகொலை செய்யப்பட்டார்.
பிவண்டியில் அழகுநிலைய பெண் படுகொலை
Published on

தானே,

தானே மாவட்டம் பிவண்டி பகுதியை சேர்ந்த பெண் லஷ்மிபாய் புர்லா (வயது38) . இவர் அழகு நிலையம் வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று லஷ்மிபாய் புர்லா, தீன்பத்தியில் உள்ள தனது வீட்டில் பிணமாக கிடந்தார்.

தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவரது உடலில் பல இடங்களில் கத்திக்குத்து காயம் இருந்தது. அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கொலை செய்த நபர் யார்?, கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com