பிவண்டியில் தம்பதியை நோக்கி துப்பாக்கியால் சுட்ட 2 பேருக்கு வலைவீச்சு கீழே குனிந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்

பிவண்டியில் தம்பதியை நோக்கி துப்பாக்கியால் சுட்ட 2 பேரை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கீழே குனிந்து கொண்டதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
பிவண்டியில் தம்பதியை நோக்கி துப்பாக்கியால் சுட்ட 2 பேருக்கு வலைவீச்சு கீழே குனிந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்
Published on

தானே,

தானே மாவட்டம் பிவண்டி கல்கேர் கிராமத்தை சேர்ந்த தம்பதி வருகிற 15-ந்தேதி நடக்க உள்ள அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

நேற்று அதிகாலை 12.30 மணி அளவில் தம்பதி வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தம்பதி வீட்டின் அருகே வந்து நின்றனர். பின்னர் அவர்களில் ஒருவர் திடீரென துப்பாக்கியை எடுத்து தம்பதியை நோக்கி 3 ரவுண்ட் சுட்டார்.

இதனை கண்ட தம்பதி உடனடியாக கீழே குனிந்து கொண்டதால் தோட்டா துளைக்காமல் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர்தப்பினர். இதற்கிடையே துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு கூடியதால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் உடனடியாக தப்பிச்சென்றனர்.

இது பற்றி தம்பதி போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து தேர்தலில் போட்டி காரணமாக தம்பதியை கொலை செய்ய முயற்சி நடந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com