தொழில் அதிபரை மிரட்டி சொத்துக்களை எழுதி வாங்கிய வழக்கில் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் உள்பட 10 பேர் மீது வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி

தொழில் அதிபரை மிரட்டி சொத்துக்களை எழுதி வாங்கிய வழக்கில் போலீஸ் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 10 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தொழில் அதிபரை மிரட்டி சொத்துக்களை எழுதி வாங்கிய வழக்கில் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் உள்பட 10 பேர் மீது வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி
Published on

திரு.வி.க. நகர்.

சென்னை அயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். தொழில் அதிபரான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த சிலருக்கும் சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்தது.

இந்த வழக்கு தொடர்பாக ராஜேசை கைது செய்த போலீசார், செங்குன்றம் அருகே உள்ள ஒரு பண்ணை வீட்டில் அடைத்து வைத்து அவரை மிரட்டி அவரது சொத்துக்களை எழுதி வாங்கி, பத்திரப்பதிவு செய்தனர்.

இந்த சம்பவத்தில் திருமங்கலம் உதவி கமிஷனர் சிவகுமார், இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. இந்த புகாரில் உண்மை தன்மை இருப்பதாக கருதிய டி.ஜி.பி., இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இது தொடர்பாகசி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உதவி கமிஷனர் சிவகுமார், இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் உள்பட 10 பேர் மீது சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

குறிப்பாக ஆள் கடத்தல், கொலை மிரட்டல், சொத்துக்களை அபகரித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்தனர். அடுத்த கட்டமாக இவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும், அதன்பிறகு கைது நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com