செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 117 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 117 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 117 பேர் பாதிப்பு
Published on

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 117 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 68 ஆயிரத்து 544 -ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 963 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2470 -ஆக உயர்ந்துள்ளது. 1111 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 38 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73 ஆயிரத்து 873-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 72 ஆயிரத்து 202 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1245 பேர் உயிரிழந்துள்ளனர். 426 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com