செங்கல்பட்டில் கல்குவாரி குட்டையில் மூழ்கி மாணவன் சாவு

செங்கல்பட்டில் கல்குவாரி குட்டையில் மூழ்கி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
செங்கல்பட்டில் கல்குவாரி குட்டையில் மூழ்கி மாணவன் சாவு
Published on

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு டவுன் சின்னம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மகன் மனோஜ் (வயது 14). செங்கல்பட்டில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையையொட்டி மதியம் 2 மணியளவில் மனோஜ் நண்பர்களுடன் செட்டி புண்ணியம் கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றான். தண்ணீரில் மூழ்கிய மனோஜ் நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதனால் உடன் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் மனோஜை மீட்கும் பணியில் ஈடுபட்டனர் இரவு நேரம் ஆனதால் மனோஜை மீட்க முடியவில்லை. நேற்று அதிகாலை மீண்டும் மாணவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு துறையினர் காலை 5 மணியளவில் மனோஜை பிணமாக மீட்டனர். இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com