கடலூரில்: ஆற்றில் மூழ்கி மீனவர் சாவு

கடலூரில் ஆற்றில் மூழ்கி மீனவர் ஒருவர் உயிரிழந்தார்.
கடலூரில்: ஆற்றில் மூழ்கி மீனவர் சாவு
Published on

கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகர் அருகே உள்ள பழைய சுனாமிநகரை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 55), மீனவர். இவரது மனைவி ராதா(50). நேற்று முன்தினம் மாலை கோவிந்தன் அதே பகுதியில் உள்ள உப்பனாற்றுக்கு மீன்பிடிக்க செல்வதாக ராதாவிடம் கூறிச்சென்றார். பின்னர் அவர் உப்பனாற்றுக்குள் இறங்கி, வலைவீசி மீன்பிடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கிருந்த சேற்றில் கோவிந்தனின் கால் சிக்கியதால் அவரால் வெளியே வரமுடியவில்லை. இதற்கிடையே மழை பெய்ததால் ஆற்றில் அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதில் கோவிந்தன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

நேற்று காலை ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்த நிலையில், கோவிந்தன் உடல் தண்ணீரில் மிதந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஆற்றில் பிணமாக மிதந்த கோவிந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது கோவிந்தனின் அவரது உடலை பார்த்து, குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து ராதா கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com