தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 90.80 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி

தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 90.80 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். கடந்த ஆண்டை விட 1.18 சதவீதம் தேர்ச்சி அதிகரித்து உள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 90.80 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி
Published on

தர்மபுரி,

பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. தர்மபுரி மாவட்டத்தில் பொதுத்தேர்வை 167 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 18,042 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். இவர்களில் 16,383 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவ-மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 90.80 ஆகும்.

பிளஸ்-தேர்வை எழுதிய 8,786 மாணவர்களில் 7,809 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 88.88 ஆகும். இதேபோல் பிளஸ்-2 தேர்வை எழுதிய 9,256 மாணவிகளில் 8,574 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 92.63 ஆகும். மாணவர்களை விட மாணவிகள் 3.75 சதவீத அளவில் கூடுதல் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் மாணவ-மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 89.62 ஆக இருந்தது. இந்த ஆண்டு 90.80 சதவீதமாக ஆக அதிகரித்து உள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 1.18 சதவீதம் தேர்ச்சி அதிகரித்து உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் பிளஸ்-2 தேர்ச்சியில் கடந்த ஆண்டு 25-ம் இடத்தில் இருந்த தர்மபுரி மாவட்டம் இந்த ஆண்டு 23-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com