வெவ்வேறு இடங்களில் மாணவர் உள்பட 2 பேர் தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் மாணவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
வெவ்வேறு இடங்களில் மாணவர் உள்பட 2 பேர் தற்கொலை
Published on

பர்கூர்,

பர்கூர் அருகே உள்ள கொல்லப்பள்ளியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் சந்தோஷ் (வயது 17). இவர் சிந்தகம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக அவர் நேற்று முன்தினம் விஷம் குடித்து விட்டு பள்ளிக்கு சென்றார். பின்னர் பள்ளி வளாகத்தில் மயங்கி கிடந்த அவரை சக மாணவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சந்தோஷ் இறந்தார். இது குறித்து கந்திகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கல்லாவி அருகே உள்ள மேல் வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர் முருகம்மாள் (60). உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் விஷத்தை குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் முருகம்மாள் இறந்தார்.

இது குறித்து கல்லாவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com