கும்மிடிப்பூண்டியில் தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரதம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் கோணிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது.
கும்மிடிப்பூண்டியில் தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரதம்
Published on

கும்மிடிப்பூண்டி,

இங்கு பெண் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், 5 முதல் 10 ஆண்டுகளாக பணி புரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட கோரியும், தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு உரிய போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்க வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கும்மிடிப்பூண்டி தொகுதி பொதுத்தொழிலாளர்கள் முன்னேற்றச்சங்கத்தின் சார்பில் மேற்கண்ட தொழிற்சாலை முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டம் நேற்று தொடங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com