

கும்மிடிப்பூண்டி,
இங்கு பெண் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், 5 முதல் 10 ஆண்டுகளாக பணி புரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட கோரியும், தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு உரிய போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்க வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கும்மிடிப்பூண்டி தொகுதி பொதுத்தொழிலாளர்கள் முன்னேற்றச்சங்கத்தின் சார்பில் மேற்கண்ட தொழிற்சாலை முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டம் நேற்று தொடங்கப்பட்டது.