ஹாசனில், நடத்தையில் சந்தேகம்: துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி பெண் கொலை - கணவர் போலீசில் சரண்

ஹாசனில் நடத்தையில் சந்தேகப்பட்டு பெண்ணை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்த அவருடைய கணவர் போலீசில் சரண் அடைந்துள்ளார். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஹாசனில், நடத்தையில் சந்தேகம்: துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி பெண் கொலை - கணவர் போலீசில் சரண்
Published on

ஹாசன்,

ஹாசன் டவுன் எஸ்.எம்.கிருஷ்ணா லே-அவுட்டை சேர்ந்தவர் லோகித். இவருடைய மனைவி நயனா (வயது 32). இவர்களுக்கு கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளான். சித்ரதுர்காவை சேர்ந்த லோகித், தற்போது தனது குடும்பத்துடன் ஹாசனில் வசித்து வந்தார். இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு லோகித் அடிக்கடி நயனாவுடன் தகராறு செய்து வந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் இரவும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த லோகித், துப்பட்டாவால் தனது மனைவியின் கழுத்தை இறுக்கி உள்ளார். இதில், நயனா மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கணவர் போலீசில் சரண்

இதையடுத்து நேற்று காலை லோகித், ஹாசன் புறநகர் போலீஸ் நிலையத்துக்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி சரண் அடைந்தார். அதன்பின்னர் போலீசார், வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது நயனா, பிணமாக கிடந்தார். பின்னர் போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை லோகித், துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து ஹாசன் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகித்தை கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தாய் இறந்ததாலும், தந்தை கைது செய்யப்பட்டதாலும் அவர்களின் 5 வயது மகன் ஆனாதை ஆனான். அவனை போலீசார் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com