

மாமல்லபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டம் கோவளம் அடுத்த கரிக்காட்டு குப்பம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார், இவரது மகன் விக்னேஷ் (வயது24). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடலில் மீன்பிடிக்கும் தொழில் செய்து வரும் இவர் நேற்று மீன்பிடி வலை மற்றும் மீன்பிடி உபகரணங்கள் வாங்குவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.