காஞ்சீபுரத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது

காஞ்சீபுரத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஆய்வு கூட்டம் கலெக்டர் பொன்னையா தலைமையில் நடந்தது.
காஞ்சீபுரத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
Published on

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு மற்றும் நோய் தடுப்பு முறைகள் பற்றிய ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது.

அனைத்து துறையை சேர்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து பள்ளி, கல்லூரி, மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு மற்றும் நோய் தடுப்பு முறைகளான கை கழுவும் முறைகள், இருமும் போதும், தும்மும் போதும், வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை கொண்டு மூடி கொள்ள வேண்டும்.

அனைத்து ஆஸ்பத்திரிகளையும் கிருமி நாசினி கொண்டு சுத்தமாக துடைத்து பராமரித்தல் வேண்டும். சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள டாக்டரை அணுக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி சுந்தரமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர், காஞ்சீபுரம் சப்-கலெக்டர் சரவணன், இணை இயக்குநர் ஜீவா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பழனி, ஸ்ரீபெரும்புதூர் உதவி காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், பொது சுகாதாரத்துறையை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com