காஞ்சீபுரத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை

காஞ்சீபுரத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
காஞ்சீபுரத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை
Published on

காஞ்சீபுரம்,

கடந்த சில நாட்களாக கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று காஞ்சீபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான, ஓரிக்கை, செவிலிமேடு, பாலுச்செட்டிச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கருமேகம் சூழ்ந்து சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

இதனால் நகரில் மேட்டுத்தெரு, காமராஜர் சாலை, பழைய ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் ஆறாக ஓடியது. சூறாவளி காற்றால் காஞ்சீபுரம் நகரில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com