தப்பி வந்த பெரியகுளம் சிறுவன் கொடுத்த தகவலால் கர்நாடகாவில் கொத்தடிமைகளாக இருந்த 3 பேர் மீட்பு உசிலம்பட்டி தம்பதி கைது

பெரியகுளத்தை சேர்ந்த சிறுவன் கொடுத்த தகவலின் பேரில், அங்கு கொத்தடிமைகளாக இருந்த 3 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.
தப்பி வந்த பெரியகுளம் சிறுவன் கொடுத்த தகவலால் கர்நாடகாவில் கொத்தடிமைகளாக இருந்த 3 பேர் மீட்பு உசிலம்பட்டி தம்பதி கைது
Published on

தேனி,

கர்நாடக மாநிலத்தில் உள்ள முறுக்கு கம்பெனியில் இருந்து தப்பி வந்த பெரியகுளத்தை சேர்ந்த சிறுவன் கொடுத்த தகவலின் பேரில், அங்கு கொத்தடிமைகளாக இருந்த 3 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக உசிலம்பட்டியை சேர்ந்த தம்பதி கைது செய்யப்பட்டனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி நாகலட்சுமி. இவர்கள் செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். மகனுக்கு 9 வயது இருக்கும் போதே குடும்ப வறுமை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு முறுக்கு தயாரிக்கும் கம்பெனிக்கு வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். ஆனால், அதன்பிறகு ஒருமுறை கூட அவன் தனது சொந்த ஊருக்கு வரவில்லை.

அவ்வப்போது செல்போனில் மட்டும் தனது பெற்றோருடன் பேசி வந்தான். இந்த நிலையில் ஒருமுறை கர்நாடாகாவில் உள்ள முறுக்கு கம்பெனிக்கு சிறுவனின் பெற்றோர் செல்போனில் தொடர்பு கொண்டு தங்கள் மகனிடம் பேச வேண்டும் என்று கூறியுள்ளனர். அப்போது, அவன் அங்கிருந்து சென்று விட்டதாக கம்பெனி ஊழியர்கள் கூறினர். இதையடுத்து தங்கள் மகனை கண்டுபிடிக்க முடியாமல் தவித்த பெற்றோர் தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம் அதுகுறித்து புகார் செய்தனர்.

அதன்பேரில் தென்கரை போலீஸ் நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் 18-ந்தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கர்நாடகாவில் அவர் எந்த முகவரியில் வேலை பார்த்தார் என்பது தெரியாததால் இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்த சிறுவன் தனது பெற்றோரை பார்க்க ஊருக்கு வந்தான்.

தகவல் அறிந்ததும் அங்கு சென்ற தென்கரை போலீசார் மற்றும் சைல்டு லைன் அலுவலர்கள் அவனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவன், கர்நாடகாவில் இருந்து தப்பி வந்து வேலூரில் ஒரு ஆழ்குழாய் கிணறு அமைக்கும் லாரியில் வேலை பார்த்ததாகவும், அங்கு இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தான். மேலும் அவன் தான் வேலை பார்த்த முறுக்கு கம்பெனியில் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த சிறுவர்கள் கொத்தடிமையாக வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தான்.

பின்னர் அவனுடைய பெற்றோரும், ஐ.ஜே.எம். என்ற சர்வதேச தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலெக்டர் பல்லவி பல்தேவை சந்தித்து இதுதொடர்பாக புகார் தெரிவித்தனர். இதையடுத்து கர்நாடகாவில் கொத்தடிமையாக உள்ள சிறுவர்களை மீட்க கலெக்டரின் உத்தரவின்பேரில், தொழிலாளர் உதவி ஆணையர் ராஜ்குமார், தாசில்தார் சுந்தர்லால், பெரியகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரன் மற்றும் போலீசார், ஏ.ஜே.எம். தொண்டு நிறுவன பிரதிநிதிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கடந்த 22-ந்தேதி கர்நாடகா மாநிலத்துக்கு புறப்பட்டு சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com