நாமக்கல்லில் எலக்ட்ரீசியனுக்கு கத்திக்குத்து சேலம் கோர்ட்டில் 2 பேர் சரண்

நாமக்கல்லில் முன்விரோதம் காரணமாக எலக்ட்ரீசியனுக்கு கத்திக்குத்து விழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்து உள்ளனர்.
நாமக்கல்லில் எலக்ட்ரீசியனுக்கு கத்திக்குத்து சேலம் கோர்ட்டில் 2 பேர் சரண்
Published on

நாமக்கல்,

நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ஆஷாத் (வயது 19). எலக்ட்ரீசியன். இவரது நண்பர் தீபக் (19). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு கொண்டிசெட்டிப்பட்டி பஸ்நிறுத்தம் அருகே நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு வந்த அன்புநகரை சேர்ந்த ஜீவானந்தம் (23), கணபதிநகர் வினோத் (20) ஆகிய இருவரும் தீபக்கை கத்தியால் குத்த முயன்றனர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்தை ஆஷாத்தை சரமாரியாக கத்தியால் குத்தினர். இதில் ஆஷாத்துக்கு தலை, மார்பு உள்ளிட்ட இடங்களில் கத்திக்குத்து விழுந்தது.

அவர் சத்தம் போடவே அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து ஆஷாத்தை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தீபக் என்பவருக்கும், ஜீவானந்தம், வினோத் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருப்பதும், அதன் காரணமாகவே இச்சம்பவம் நடந்து இருப்பதும் தெரியவந்து உள்ளது.

இதற்கிடையே போலீசார் தேடுவதை அறிந்த ஜீவானந்தம், வினோத் ஆகிய இருவரும் நேற்று சேலம் 2-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com