நங்கநல்லூரில் பூட்டிய வீட்டுக்குள் வக்கீல் மர்மசாவு

நங்கநல்லூரில் பூட்டிய வீட்டுக்குள் வக்கீல் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
நங்கநல்லூரில் பூட்டிய வீட்டுக்குள் வக்கீல் மர்மசாவு
Published on

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த நங்கநல்லூர் ஜெயின் காலனியை சேர்ந்தவர் மாரிகுமார் (வயது 61). வக்கீல். இவருடைய மனைவி மீனாட்சி. இவர்களது மகள் அனுசாய். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மீனாட்சி இறந்துவிட்டார். மகளும் விடுதியில் தங்கிப்படிப்பதால் மாரிகுமார் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி பழவந்தாங்கல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை தட்டினர். ஆனால் உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு பூட்டிய வீட்டுக்குள் வக்கீல் மாரிகுமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதனால் அவர் இறந்து 2 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என தெரிகிறது.

அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து வக்கீல் மாரிகுமாரின் சாவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com