பாளையங்கோட்டையில் கருப்பு சட்டையை எரித்து இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் 26 பேர் கைது

பாளையங்கோட்டையில் கருப்பு சட்டையை எரித்து இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக 26 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாளையங்கோட்டையில் கருப்பு சட்டையை எரித்து இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் 26 பேர் கைது
Published on

நெல்லை,

பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலை முன்பு நேற்று காலை இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் திடீரென்று திரண்டனர். அவர்கள், கருப்பு சட்டையை எரித்து பெரியார், திராவிட கழகத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.

இந்து தெய்வத்தையும், இந்துக்களையும் தொடர்ந்து இழிவாக பேசி வரும் திராவிட இயக்கத்தை தடை செய்ய கோரி இந்த போராட்டம் நடந்தது. இதில் தென் மண்டல செயலாளர் ராஜா பாண்டியன், மகளிர் அணி தலைவி காந்திமதி, மாவட்ட மகளிர் அணி தலைவி லட்சுமி, நெல்லை மாவட்ட தலைவர் உடையார், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி தலைவர் திருமலை நம்பி, மாநகர இளைஞர் அணி தலைவர் இசக்கி பாண்டி, ஒருங்கிணைப்பாளர் கணேசபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், போராட்டம் நடத்திய ராஜா பாண்டியன், உடையார் உள்பட 26 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீஸ் வேனில் ஏற்றி சென்று, தனியார் திருமண மண்டத்தில் அடைத்து வைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com