தடுப்புச்சுவரில் கார் மோதி கோர விபத்து குழந்தை, 2 பெண்கள் பலி ஒர்லி அருகே சோகம்

ஒர்லி அருகே தடுப்புச்சுவர் மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில், 6 மாத குழந்தை மற்றும் 2 பெண்கள் பலியாகினர்.
தடுப்புச்சுவரில் கார் மோதி கோர விபத்து குழந்தை, 2 பெண்கள் பலி ஒர்லி அருகே சோகம்
Published on

மும்பை,

மும்பை அந்தேரியை சேர்ந்த பெண் பாவனா (வயது55), இவரது மகள் நமிகா (30). இவரது 6 மாத குழந்தை நிஷிகா. பாவனா, நமிகா ஆகிய இருவரும் குழந்தை நிஷிகாவுடன், ஒர்லியில் வசிக்கும் உறவினரான ஜூயு குருநானி (52) என்பவரின் வீட்டிற்கு நமிகாவின் காரில் நேற்று முன்தினம் சென்றிருந்தனர்.

இதன்பின்னர் ஜூயு குருநானியையும் அழைத்து கொண்டு அந்தேரிக்கு அதே காரில் திரும்பி வந்துகொண்டிருந்தனர். ஹாஜி அலி ரோடு அருகே கார் வந்த போது, திடீரென நமிகாவின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதில் கார் சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com