சோழிங்கநல்லூரில் தொழிலாளி கொலை வழக்கில் ஆட்டோ டிரைவர் கைது

சோழிங்கநல்லூரில் தொழிலாளி கொலை வழக்கில் ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
சோழிங்கநல்லூரில் தொழிலாளி கொலை வழக்கில் ஆட்டோ டிரைவர் கைது
Published on

சோழிங்கநல்லூர்,

சோழிங்கநல்லூர் காந்திநகர் ஓடை பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 43). கூலித்தொழிலாளி. இவருக்கு சொந்தமாக இடம் இல்லாததால் அங்கு உள்ள காலி இடங்களில் தங்கி படுத்து தூங்குவது வழக்கம். இவருடைய நண்பர் ராஜா (42) ஆட்டோ டிரைவர். இவருக்கும் சொந்த இடம் இல்லாததால் கணேசனுடன் சேர்ந்து அங்குள்ள காலியான இடத்தில் தங்கி கொள்வார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவரும் சேர்ந்து சைக்கிள் ஒன்றை திருடி உள்ளனர். அதை விற்று வந்த பணத்தில் நேற்று முன்தினம் மாலை மது குடித்துள்ளனர். போதையில் சைக்கிள் விற்ற பணம் குறித்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆட்டோ டிரைவர் ராஜா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கணேசனின் மார்பு, தொடை உள்ளிட்ட பல இடங்களில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இதில் சம்பவ இடத்திலேயே கணேசன் இறந்து விட்டார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த செம்மஞ்சேரி போலீசார் கொலை வழக்கில் ஆட்டோ டிரைவர் ராஜாவை கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோர்ட்டு காவலில் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com