சிவகாசியில் பரிதாபம்: சரக்கு வாகனம் மோதி - போலீஸ் ஏட்டு பலி

சிவகாசியில் சரக்கு வாகனம் மோதியதில் போலீஸ் ஏட்டு பரிதாபமாக பலியானார்.
சிவகாசியில் பரிதாபம்: சரக்கு வாகனம் மோதி - போலீஸ் ஏட்டு பலி
Published on

சிவகாசி,

சிவகாசி நகர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தவர் மாரிக்கண்ணு (வயது 55). இவர் நேற்று மதியம் வழக்கம் போல் பணியை முடித்து விட்டு போலீஸ் நிலையத்தில் இருந்து மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த சரக்கு வாகனம் ஒன்று போலீஸ் ஏட்டு மாரிக்கண்ணு மீது பயங்கரமாக மோதியது.

இதில் மாரிக்கண்ணு கால் எலும்பு முறிவு ஏற்பட்டு தலையில் பலத்தகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் போலீஸ் ஏட்டு மாரிக்கண்ணு பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த பள்ளப்பட்டி ரோட்டை சேர்ந்த மோகன் (25) என்பவரை கைது செய்தனர். ஏட்டு மாரிக்கண்ணுக்கு மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். போலீஸ் ஏட்டு மாரிக்கண்ணு சரக்கு வாகனம் மோதி இறந்த சம்பவம் போலீசார் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com