டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம்

உலக நுகர்வோர் தின விழா மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பேசினார்.
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம்
Published on

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு சங்கம், பெட்காட் இந்தியா அமைப்பு சார்பில், உலக நுகர்வோர் தின விழா மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில், நுகர்வோரின் உரிமைகள், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து விளக்கி கூறினார்.

மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதா, திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி வரவேற்று பேசினார்.

திருச்செந்தூர் தாசில்தார் தில்லைப்பாண்டி, யூனியன் ஆணையாளர்கள் சுடலை, இசக்கியப்பன், மண்டல துணை தாசில்தார் கோபால், பெட்காட் அமைப்பு தலைவர் செல்வராஜ், நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஜெயராஜ், செயலாளர் ஜேக்சன் ஆகியார் பேசினர். கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com