டெல்டாவில், கொரோனாவுக்கு ஒரே நாளில் 20 பேர் பலி 1,571 பேருக்கு தொற்று

டெல்டாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 7 பெண்கள் உள்பட 20 பேர் பலியானார்கள். 1,571 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்டாவில், கொரோனாவுக்கு ஒரே நாளில் 20 பேர் பலி 1,571 பேருக்கு தொற்று
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் நேற்று 665 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 863 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 571 ஆக உயர்ந்தது. தற்போது 4,685 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 40, 75, 50 வயது பெண்கள் மற்றும் 31, 32, 59, 76, 65, 67, 72, 53 வயது ஆண்கள் உள்பட 11 பேர் பலியானார்கள். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 386 பேர் பலியாகி உள்ளனர்.

திருவாரூரில், 2 பேர் சாவு

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 340 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று 289 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 19 ஆயிரத்து 347 ஆக உயர்ந்தது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 51 வயது ஆண் மற்றும் 40 வயது பெண் ஆகியோர் பலியானார்கள். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை 148 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தற்போது 1,923 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நாகையில், 7 பேர் பலி

நாகை மாவட்டத்தில் நேற்று 566 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 242 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18 ஆயிரத்து 599 ஆக உயர்ந்தது. தற்போது 2,370 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 63, 75, 63, 78 வயது ஆண்கள் மற்றும் 65, 60, 62 வயது பெண்கள் என 7 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 221 ஆக உயர்ந்துள்ளது.

டெல்டாவில், ஒரே நாளில் 7 பெண்கள் உள்பட 20 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். மேலும் 1,571 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 1,394 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com