தடுப்புக்காவல் சட்டத்தில் பெண் சாராய வியாபாரி கைது

தடுப்புக்காவல் சட்டத்தில் பெண் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார்.
தடுப்புக்காவல் சட்டத்தில் பெண் சாராய வியாபாரி கைது
Published on

விழுப்புரம்,

திண்டிவனம் அருகே கீழ் எடையாளம் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மனைவி தனலட்சுமி(வயது 49). பிரபல சாராய வியாபாரியான இவர் மீது திண்டிவனம் பகுதியில் சாராயம் கடத்தியதாகவும், விற்பனை செய்ததாகவும் பல்வேறு வழக்குகள் உள்ளன. தொடர்ந்து, இவர் சாராயத்தை கடத்தி விற்பனை செய்து வந்ததால் இவருடைய குற்றச்செயல்களை தடுக்கும்பொருட்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் தனலட்சுமியை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இதையடுத்து தனலட்சுமியை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் நேற்று கைது செய்து, வேலூரில் உள்ள பெண்கள் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com