முன்விரோதத்தில் தகராறு; கத்தியால் குத்தி வாலிபர் கொலை

திருப்புவனம் அருகே முன்விரோதத்தில் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தி வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
முன்விரோதத்தில் தகராறு; கத்தியால் குத்தி வாலிபர் கொலை
Published on

திருப்புவனம்,

திருப்புவனம் போலீஸ் சரகத்தைச் சேர்ந்தது டி.பாப்பான்குளம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜா (வயது 18), பாலமுருகன்(30). இவர்களுக்கும் இதே கிராமத்தைச் சேர்ந்த குமார் என்ற குமாரசாமி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த 6-ந்தேதி அந்த கிராமத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் ராஜா, பாலமுருகன், குமாரசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அங்கு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்தவர்கள் விலக்கி விட்டு, அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைத்த னர். அப்போது குமாரசாமி அவரது வீட்டிற்கு வந்து விட்டார். சிறிது நேரத்தில் பாலமுருகன், ராஜா ஆகியோர் அவர்களது வீட்டிற்கு வந்தனர். அப்போது குமாரசாமி வீட்டின் அருகே 2 பேரும் வந்த போது, அவர்களிடம் குமாரசாமி தகராறு செய்தார்.

அப்போது குமாரசாமி ஆத்திரமடைந்து ராஜா, பாலமுருகனை கத்தியால் குத்தினார். அதில் பலத்த காயமடைந்த பாலமுருகன் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி பாலமுருகன் இறந்தார். ராஜா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேது வழக்கு பதிவு செய்து குமாரசாமியை கைது செய்து விசாரித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com