

தூத்துக்குடி:
தூத்துக்குடி கே.வி.கே.சாமிநகரை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 30). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்து உள்ளது. கடந்த சில மாதமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பி உள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுந்த நிலையில் தலை, முகம் ஆகியவற்றில் பலத்த காயங்களுடன் கிடந்து உள்ளார். இதனை கண்ட அவரது வீட்டார் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று உள்ளனர். ஆனால் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.