

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 310 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 134 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஆஸ்பத்திரியில் 238 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் கொரோனா தொற்றால் 1,938 பேர் இறந்துள்ளனர்.