தமிழகம் உள்பட 4 மாநிலத்தை சேர்ந்தவர்கள் கர்நாடகத்திற்குள் நுழைய தடை - எடியூரப்பா அறிவிப்பு

தமிழகம் உள்பட 4 மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு கர்நாடகத்திற்குள் நுழைய தடை விதித்து முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.
தமிழகம் உள்பட 4 மாநிலத்தை சேர்ந்தவர்கள் கர்நாடகத்திற்குள் நுழைய தடை - எடியூரப்பா அறிவிப்பு
Published on

பெங்களூரு,

நாட்டில் மராட்டியம், குஜராத், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் இந்த 4 மாநிலங்களை சேர்ந்தவர்கள், கர்நாடகத்திற்குள் வந்தால் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று அறிவித்தார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

குஜராத், மராட்டியம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் மக்களை வருகிற 31-ந் தேதி வரை கர்நாடகத்திற்குள் நுழைய தடை விதித்து முடிவு செய்துள்ளோம். ஆனால் படிப்படியாக அனுமதிப்போம்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

இதுதொடர்பாக போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை கூறும்போது, குஜராத், மராட்டியம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து கர்நாடகத்திற்குள் வந்தவர்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. அதனால் அந்த மாநிலங்களில் இருந்து வரும் மக்களை கர்நாடகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என்று முடிவு எடுத்துள்ளோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com