திருவள்ளூர் மாவட்டத்தில் விரால் மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு இடுபொருள் மானியம்

திருவள்ளூர் மாவட்டத்தில் விரால் மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு இடுபொருள் மானியமாக வழங்கப்படும். பயன்பெறுமாறு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் விரால் மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு இடுபொருள் மானியம்
Published on

விரால் மீன் வளர்ப்பு

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் 2021-2022-ன் கீழ் விரால் மீன் வளர்ப்பினை ஊக்குவித்திட இடுபொருள் மானியம் வழங்குதல் திட்டத்தை செயல்படுத்த அரசால் ரூ.30 லட்சத்து 30 ஆயிரம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் மீன் வளர்ப்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், உள்நாட்டு மீன்வளர்ப்பு பெருக்கும் நோக்கோடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் வாயிலாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விரால் மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ள பயனாளிகளுக்கு ஏற்கனவே 1,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டு உள்ள பண்ணை குளம் புனரமைத்தல் மற்றும் விரால் மீன் வளர்ப்பை ஊக்குவித்திட இடுபொருள் மானியம் வழங்குதல் திட்டம் உள்ளிட்ட செலவினம் ஆக மொத்தம் ரூ.75 ஆயிரத்தில் 40 சதவீதம் மானியமாக ரூ.30 ஆயிரம் வழங்கி இந்த திட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பயன்பெற விரும்புவோர்

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் உதவி இயக்குனர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, திருவள்ளூர் (இருப்பு) பொன்னேரி, எண் 5, சங்கர்நகர், பாலாஜி தெரு, வேண்பாக்கம், பொன்னேரி. மற்றும் 044-27972457 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com