மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 71 பேர் காயம்

மணப்பாறையை அடுத்த ஆவாரங்காட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 71 பேர் காயமடைந்தனர்.
மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 71 பேர் காயம்
Published on

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பாலக்குறிச்சி ஆவாரங்காட்டில் ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, ஆவாரங்காடு பொன்னர் சங்கர் திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் தடுப்பு வேலிகள், கேலரி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகளை கால்நடை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்த பின்னர், அவை அனுமதிக்கப்பட்டன. மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து, முழு உடல் தகுதி உள்ள வீரர்கள் போட்டிக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து நேற்று காலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. பாலக்குறிச்சி, கலிங்கப்பட்டி, கீரணிப்பட்டி, சோலையம்மாபட்டி ஆகிய ஊர்களில் இருந்து 40-க்கும் மேற்பட்ட கோவில் காளைகள் அழைத்து வரப்பட்டு வாடிவாசல் முன்பு நிறுத்தப்பட்டன. திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி, போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக், சப்-கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆகியோர் கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com