விராலிமலையில் இன்று ஜல்லிக்கட்டு: முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் ஆய்வு

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
விராலிமலையில் இன்று ஜல்லிக்கட்டு: முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் ஆய்வு
Published on

விராலிமலை,

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதனையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் கீதா ஆகியோர் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்திற்கு சென்று வடிவாசல், பார்வையாளர்கள் அமரும் இடம் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளை குறித்து ஆய்வு செய்தனர். இதில் இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிகாமணி, விராலிமலை தாசில்தார் சதீஸ்சரவணகுமார், துணை தாசில்தார் காமராஜ் மற்றும் விழா குழுவினர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com