நடந்து சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு

தேனியில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
நடந்து சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு
Published on

தேனி:

சின்னமனூர் அக்ரஹாரம் தெருவை சேர்ந்த அழகர்சாமி மனைவி ராஜாத்தி (வயது 72). இவர் நேற்று தேனி வி.ஐ.பி. நகரில் உள்ள தனது மகன் ராஜ்குமாரை பார்க்க அவருடைய வீட்டுக்கு வந்தார். நேற்று பிற்பகல் 3 மணியளவில் வீட்டுக்கு அருகில் வந்து கொண்டு இருந்தபோது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் அவரை பின்தொடர்ந்து வந்தனர்.

மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து இருந்த நபர் திடீரென ராஜாத்தி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் சங்கிலியை பறித்தார். பின்னர் அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து தேனி போலீஸ் நிலையத்தில் ராஜாத்தி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com