

கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி கிராமத்தில் வசித்து வருபவர் துரைசாமி (வயது 85). விவசாயி. நேற்று முன்தினம் இரவு வீட்டில் துரைசாமியும், அவரது மனைவியும் தூங்கிக்கொண்டிருந்தனர்.
நேற்று காலை துரைசாமி எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவுக்கான பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் பார்த்தபோது பானையில் வைக்கப்பட்டிருந்த 7 பவுன் நகைகள் மர்மநபரால் திருடப்பட்டிருந்தது.
கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வீடுகளில் இது போன்ற திருட்டு சம்பவங்கள் நடந்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.