க.பரமத்தி அருகே கிணற்றில் குதித்து பிளஸ்-2 மாணவன் தற்கொலை தங்க கை சங்கிலி தொலைந்ததால் விபரீத முடிவு

கையில் அணிந்திருந்த தங்க கை சங்கிலி தொலைந்ததால், பெற்றோர் திட்டுவார்களே என்று பயந்து பிளஸ்-2 மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
க.பரமத்தி அருகே கிணற்றில் குதித்து பிளஸ்-2 மாணவன் தற்கொலை தங்க கை சங்கிலி தொலைந்ததால் விபரீத முடிவு
Published on

க.பரமத்தி,

கரூர் மாவட்டம், க.பரமத்தி குளம் நகரைச் சேர்ந்தவர் பூபதி. ஒன்றிய கவுன்சிலர். இவரது மகன் தீபக் (வயது 18). இவர், அரசு பள்ளியில் பிளஸ்-2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இவர், தனது கையில் 1 பவுன் சங்கிலி (பிரேஸ்லெட்) அணிந்திருந்தார். இதனை நேற்று அவர் தொலைத்து விட்டதாக கூறப்படுகிறது.

அதனை பல்வேறு இடங்களில் தீபக் தேடிப்பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்காததால் பெற்றோர் திட்டுவார்களே என்று பயந்த தீபக், குளம்நகரில் உள்ள ஒரு கிணற்றில் நேற்று மாலை குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அந்த பகுதி மக்கள் பார்த்து க.பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசாரும், அரவக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி தீபக் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

பின்னர் மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தங்க கை சங்கிலி தொலைந்ததால் இந்த விபரீத முடிவை மாணவன் எடுத்தானா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com