கலசபாக்கம்; டிராக்டர் டிரைவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்

கலசபாக்கம் அருகே கொலைசெய்யப்பட்ட டிராக்டர் டிரைவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கலசபாக்கம்; டிராக்டர் டிரைவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்
Published on

கலசபாக்கம்

கலசபாக்கம் அருகே கொலைசெய்யப்பட்ட டிராக்டர் டிரைவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

டிராக்டர் டிரைவர் கொலை

கலசபாக்கம் அடுத்த மேலாரணி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 24). டிராக்டர் டிரைவர். இவர் மேல்தாங்கல் மலைக்குன்று அருகில் முகத்தில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மற்றும் கலசபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்தனர்.

பின்னர் பிரகாஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் நேற்று காலை வில்வாரணி நட்சத்திர கோவில் அருகில், இறந்த பிரகாஷின் உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த கலசபாக்கம் போலீசார் மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், துணை சூப்பிரண்டு பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். விசாரணை செய்து நடவடிக்கைகள் எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர்.

அதைத்தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

இந்த மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com