கார்வார் கடல் பகுதியில் படகு கவிழ்ந்தது; குமரி மீனவர்கள் 2 பேர் கதி என்ன?

கார்வார் கடல் பகுதியில் படகு கவிழ்ந்து மூழ்கிய குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 2 பேர் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணியில் கடலோர காவல் படையினரும், மீனவர்களும் ஈடுபட்டுள்ளனர்.
கார்வார் கடல் பகுதியில் படகு கவிழ்ந்தது; குமரி மீனவர்கள் 2 பேர் கதி என்ன?
Published on

மங்களூரு,

அரபிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கர்நாடக மாநிலத்தின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே குமரி மாவட்டம் பூத்துறையை சேர்ந்த மீனவர்கள் செபஸ்தியான் (வயது 41), ஜெகதாஸ் (30), சிஜன் (25), புஷ்பராஜ் (46), அருள்ராஜ் (25) ஆகிய 5 பேரும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த மீனவர் ததேயுஸ் (50) என மொத்தம் 6 பேர் கடந்த 14-ந் தேதி தேங்காப்பட்டணத்தில் இருந்து ஒரு படகில் மீன்பிடிக்க புறப்பட்டனர். அவர்கள் கர்நாடக மாநில கடல் பகுதிக்கு சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com