துறையூர் அருகே கிணற்றில் மூழ்கி விற்பனை பிரதிநிதி பலி

துறையூர் அருகே கிணற்றில் மூழ்கி விற்பனை பிரதிநிதி பலியானார்
துறையூர் அருகே கிணற்றில் மூழ்கி விற்பனை பிரதிநிதி பலி
Published on

துறையூர், மே.18-
துறையூர் அருகே கிணற்றில் மூழ்கி விற்பனை பிரதிநிதி பலியானார்
விற்பனை பிரதிநிதி
துறையூர் அருகே உள்ள நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் மனோகரன் (வயது 35). இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தார். இவர் அருகே வயலில் உள்ள கிணற்றுக்கு குளிக்க சென்றார்.
இந்தநிலையில் அவர் கிணற்று தண்ணீருக்குள் மூழ்கி மூச்சை அடக்கி விளையாடியதாகதெரிகிறது.அப்போது, ஆழமான பகுதிக்கு சென்று மூச்சை அடக்கியபோது, மூச்சு திணறி இறந்தார். இதைக்கண்ட கரையில் இருந்தவர்கள் துறையூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நிலைய அதிகாரி அறிவழகன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் தண்ணீர் அதிகமாக இருந்ததால் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி மனோகரனின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கிணற்றில் மூழ்கி இறந்த மனோகரனுக்கு சரண்யா என்ற மனைவியும், சுதீன் என்ற மகனும், சுகன்யா என்ற மகளும் உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com