பள்ளி மாணவியை கொன்ற டிரைவர் மீது பாலியல் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்ப்பட்டி தெற்கு காடு மலையடிவாரம் பகுதியை சேர்ந்தவர் சாமிவேல்.
பள்ளி மாணவியை கொன்ற டிரைவர் மீது பாலியல் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்
Published on

ஆத்தூர்,

கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சின்னபொண்ணு. இவர்களது மகள் ராஜலட்சுமி (வயது 14). 8-ம் வகுப்பு மாணவியான ராஜலட்சுமி கடந்த 22-ந் தேதி வீட்டில் இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த நெல் அறுவடை எந்திர டிரைவர் தினேஷ்குமார் (26) என்பவர் திடீரென சாமிவேல் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த ராஜலட்சுமி தலையை துண்டித்து கொலை செய்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஆத்தூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com