அரசுத்துறைக்கு பொருட்கள் வாங்கியதில் விதிமுறை மீறல் கிரண்பெடி குற்றச்சாட்டு

அரசுத்துறைக்கு பொருட்கள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கவர்னர் கிரண்பெடி குற்றஞ்சாட்டி உள்ளார்.
அரசுத்துறைக்கு பொருட்கள் வாங்கியதில் விதிமுறை மீறல் கிரண்பெடி குற்றச்சாட்டு
Published on

புதுச்சேரி,

அரசு துறைகளுக்கு 400 பொருட்களை வாங்கியது தொடர்பான கோப்பு கவர்னர் மாளிகைக்கு வந்தது. அவசர தேவையில்லாத காலத்தில் இந்த பொருட்களை சிங்கிள் டெண்டர் (ஒரே ஒருவர் மட்டும் டெண்டரில் கலந்துகொண்டது) முறையில் வாங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை.

இதற்கான கோப்பு தலைமை செயலாளருக்கோ, நிதித்துறைக்கோ அனுப்பப்படவில்லை. அந்த கோப்பு துறை அமைச்சரின் ஒப்புதல் மட்டுமே பெறப்பட்டுள்ளது. இது விதிமுறை மீறல் ஆகும்.

மத்திய உள்துறைக்கு...

இதற்கு கவர்னரின் அலுவலகம் ஒப்புதல் அளிக்காது. அந்த கோப்பினை மத்திய உள்துறைக்கு அனுப்ப உள்ளேன். இதுதொடர்பாக மூத்த அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்படும். மேலும் துறை ரீதியான விசாரணையும் நடத்தப்படும்.

எனவே அதிகாரிகள் தங்கள் பணியின்போது கவனமாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அவை உங்கள் எதிர்காலம் தொடர்பாக கேள்வியை எழுப்பிவிடும். அதிகாரிகள் பயமின்றி யாருக்கும் சாதகமில்லாமல் செயல்படவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com