கோவிந்தவாடி குரு பகவான் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா

கோவிந்தவாடி குரு பகவான் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவிந்தவாடி குரு பகவான் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா
Published on

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அருகே உள்ள கோவிந்தவாடி குருபகவான் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடந்தது. முன்னதாக குருபகவான் (தட்சிணாமூர்த்தி உற்சவர்) வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது அர்ச்சகர்கள் சந்திரசேகர குருக்கள், சோமு குருக்கள், மணி குருக்கள் ஆகியோர் கற்பூர தீபாராதனை காட்டினர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

இதில், காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் கணேசன், வேலூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அசோக்குமார், காஞ்சீபுரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரும், கோவில் தக்காருமான ரமணி, கோவில் செயல் அலுவலர் வெங்கடேசன், திருமலை வையாவூர் கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார், கச்சபேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் குமரன், கோவில் மேலாளர் ராமு உள்பட திரளானோர் குரு பகவானை தரிசனம் செய்தனர்.

காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் முடங்குவீதியில் புகழ் பெற்ற காயாரோகணீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குருப்பெயர்ச்சியையொட்டி, அதிகாலையில் இருந்தே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று குருபகவானை மனமுருகி வழிபட்டனர்.

அ.தி.மு.க. நிர்வாகி முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு குருபகவானை தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com