தேன்கனிக்கோட்டை அருகே பெண் யானை சாவு

தேன்கனிக்கோட்டை அருகே வனப்பகுதியில் பெண் யானை இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேன்கனிக்கோட்டை அருகே பெண் யானை சாவு
Published on

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று நேற்று இறந்து கிடந்தது. இதை வனப்பகுதியில் ரோந்து சென்ற வனத்துறை ஊழியர்கள் பார்த்தனர். அவர்கள் இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் மாவட்ட வன அலுவலர் பிரபு, தேன்கனிக்கோட்டை வனச்சரகர் சுகுமார் தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து மாவட்ட வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அவர்கள் பெண் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்து அதே இடத்தில் அடக்கம் செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் காட்டு யானை உடல்நலக்குறைவு காரணமாக இறந்தது தெரியவந்தது. இது குறித்து தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com