பெரும்பாறை அருகே மலைப்பாதையில் மண்சரிவு, மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

பெரும்பாறை அருகே மலைப்பாதையில் மண்சரிவு, மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரும்பாறை அருகே மலைப்பாதையில் மண்சரிவு, மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
Published on

பெரும்பாறை:
கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, தடியன்குடிசை, மங்களம்கொம்பு, கே.சி.பட்டி, பெரியூர், பாச்சலூர் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் பெரும்பாறை மற்றும் சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் பலத்த மழைபெய்தது. அதன்பிறகு இரவு முதல் நேற்று காலை வரை விடிய, விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. மழையுடன் சூறாவளி காற்றும் வீசியது. இதனால் மலைக்கிராமங்களில் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
குறிப்பாக புல்லாவெளி-ஏணிக்கல் இடையேயான மலைப்பாதையில் 4 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அந்த வழியாக வந்த அரசு பஸ் மற்றும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொக்லைன் எந்திரம் மூலம் மண்சரிவை சீரமைத்தனர். அதைத்தொடர்ந்து புல்லாவெளி-ஏணிக்கல் மலைப்பாதையில் போக்குவரத்து தொடங்கியது. மண்சரிவால் சுமார் 8 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் தாண்டிக்குடி-பண்ணைக்காடு இடையே கடுகுதடிபுதூர் அருகே மலைப்பாதையில் மரம் சாய்ந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து, மலைப்பாதையில் விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன்பிறகு போக்குவரத்து தொடங்கியது. மரம் சாய்ந்ததால் இந்த பாதையில் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com