

பின்னர் அவர்கள் இதுகுறித்து ஊர் மக்களிடம் தகவல் தெரிவித்தனர். உடனே ஊர் மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தைப்புலியை தேடினார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினரும் விரைந்து வந்து திருவடனேரி பகுதியில் புதர்கள், வயல்காடு பகுதிகளில் சிறுத்தைப்புலியை தேடினார்கள். அங்கு பதிந்திருந்த பெரிய கால் தடங்களையும் ஆய்வுசெய்து வருகின்றனர். ஏற்கனவே கடந்த சிலதினங்களுக்கு முன்னர் சங்கனாங்குளம், வடக்கு விஜயநாராயணம் பகுதிகளில் குட்டியுடன் சிறுத்தைபுலியின் நடமாட்டத்தை விவசாயிகள் பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.