விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்றது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள கடம்பூர் கிராமத்தில் கரடு புறம்போக்கு நிலத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வரும் ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்க கோரி விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி செயலாளர் கேது என்கிற தென்னவன் தலைமை தாங்கினார். கடம்பூர் அருள், சு.வீரா, கோ.மணிமாறன், சுதாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில துணை பொது செயலாளர் வன்னியரசு, காஞ்சீபுரம் மைய மாவட்ட செயலாளர் செங்கை தமிழரசன், மண்டல செயலாளர் விடுதலைச்செழியன், மாநில வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் சொக்கலிங்கம், ஆரோன் மாணிக்கராஜ், அன்புச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com