

உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே பாலி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நூலகம் உள்ளது. சம்பவத்தன்று நூலகத்துக்கு வந்த அதேகிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகன் முருகன்(வயது 29) என்பவர், அங்கிருந்த புத்தங்களை தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இதில் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து பாலி ஊராட்சி செயலாளர் வீரவேல் கொடுத்த புகாரின் பேரில் எடைக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.