பங்கு சந்தை முதலீட்டில் நஷ்டம்: தாய்-மகன் தூக்குப்போட்டு தற்கொலை நெல்லையை சேர்ந்தவர்கள்

பங்கு சந்தை முதலீட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் தொல்லையால் விரக்தி அடைந்த நெல்லையை சேர்ந்த வாலிபர், தனது தாயுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பங்கு சந்தை முதலீட்டில் நஷ்டம்: தாய்-மகன் தூக்குப்போட்டு தற்கொலை நெல்லையை சேர்ந்தவர்கள்
Published on

அம்பத்தூர்,

சென்னை கொரட்டூர் வாஞ்சி நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் ஜான்ஞானமுத்து (வயது 60). இவர், எழும்பூர் பகுதியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி அமலா (57). இவர்களுக்கு ஜோஸ்வா (29) என்ற மகனும், பியூலா (25) என்ற மகளும் உள்ளனர்.

இவர்களது சொந்த ஊர் நெல்லை ஆகும். கடந்த 6 ஆண்டுகளாக இந்த வீட்டில் வசித்து வருகின்றனர். பியூலாவுக்கு திருமணமாகி அதே பகுதியில் கணவருடன் வசித்து வருகிறார்.

பி.எஸ்சி. பட்டதாரியான ஜோஸ்வா, கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். பங்கு சந்தையில் முதலீடும் செய்து வந்தார். கருத்துவேறுபாடு காரணமாக ஜான்ஞானமுத்து கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்தை விட்டு பிரிந்து, தான் வேலை செய்யும் இடத்திலேயே தங்கி விட்டார். ஜோஸ்வா, தனது தாய் அமலாவுடன் வசித்து வந்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com